கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று (14) அதிகாலை

  சென்ற  அரசியல்வாதி ஒருவர் பயணிகளின் பயணப் பொதிகளை அங்குமிங்கும் நகர்த்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவரின் காதில் அறைந்து மிரட்டியதாக விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. 

வெளிநாட்டு பயணமொன்றுக்காக அரசியல்வாதியின் மனைவி உட்பட பலர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

தனது மனைவி உட்படலானோரை  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  அழைத்துச் செல்வதற்காக இராஜாங்க அமைச்சர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் சென்று டிக்கெட் வாங்காமல் பிரதான வாயில் ஊடாக விமான நிலையத்துக்குள் பிரவேசித்ததாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கி ஏந்தியிருந்ததால் அவர்களை உள்நுழைய அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்  குறித்த  அரசியல்வாதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அரசியல்வாதியுடன்  வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்துக்குள் எடுத்துச் செல்வதற்காக குறைந்த கட்டணத்தை வழங்கியதற்காக அரசியல்வாதியிடம் உரிய கட்டணத்தை செலுத்துமாறு  அங்கிருந்த ஊழியர்கள்  கேட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த அந்த அரசியல்வாதி, தனது காலணியால் ஒரு ஊழியரின்  காலை மிதித்து, காதில் குத்திவிட்டு, பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி