தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை தபால் மூல வாக்களிப்புக்கு முன்னர் வெளியிடுவதாக இலங்கைத்

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப் போகும் வேட்பாளர் தொடர்பில் “அத தெரண” கேட்ட  போதே சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.

வட கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளதால் அவர்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்களுடன் இவ்வாரத்தினுள் பேச்சுவார்த்தையினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி