புதிய கொவிட் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதால், இந்தியாவில் 6,491 கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய ஊடக அறிக்கைகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 7 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், கொவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
புதிய கொவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உருவெடுத்திருந்தாலும், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி முதல் கொவிட் காரணமாக 65 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த உயிரிழப்புகள், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பதிவாகியுள்ளன.