உற்பத்திச் செலவுக்கு இணையாக மின்சாரக் கட்டணம் இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்

எனத் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கடந்த டிசெம்பர் மாத மின் கட்டணத்தை விட இவ்வருட மின் கட்டண அதிகரிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது பற்றி மேலும் பேசிய ளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, "மின்சாரக் கட்டணம், உற்பத்திச் செலவுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. டிசெம்பரில் காணப்பட்ட மின்சாரக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது மின் கட்டணம் சிறிதும் அதிகரிக்காது. தொழில்துறைகள், வீடுகள் மற்றும் பிற ஹோட்டல் துறைகளில் உள்ளவர்கள், டிசெம்பரில் செலுத்திய மின்சாரக் கட்டணத்தை விட அதிக கட்டணத்தைச் செலுத்த மாட்டார்கள். அரசாங்கம் அதை நோக்கியே செயற்பட்டு வருகிறது" என்றார்.

2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.75 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

30 - 60 அலகு பிரிவின் ஒரு அலகுக்கு இதுவரை இருந்த விலை 2 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் ஒரு அலகின் புதிய விலை ரூ.8 ஆகும்.

அதன்படி, அந்த பிரிவின் மாதாந்திர கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து ரூ. 210ஆக மாறியுள்ளது.

இதற்கிடையில், 61 - 90 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.240 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

91 - 120 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.360 ஆகும்.

121 - 150 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.600 ஆகும்.

121 - 180 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.840 ஆகவும், 180 அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவிற்கு ரூ.2020 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டு பிரிவில் மின்சாரக் கட்டணத் திருத்தம் ரூ.20 லிருந்து ரூ.2020 ஆகவும் அதிகரித்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான மாதாந்திர நிலையான கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்பதுடன், அலகுகளுக்கான கட்டணம் மட்டுமே அதிகரிக்கும்.

பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 5,000 அப்படியே காணப்படுவதுடன், மாதாந்திர விண்ணப்பக் கட்டணம் மட்டும் ரூ. 100 அதிகரிக்கும்.

அதன்படி, மேற்கண்ட பிரிவில் ரூ.23 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.28 ஆகவும், ரூ.13 ஆக நிலவிய ஒரு அலகின் கட்டணம் ரூ.15 ஆகவும், ரூ.11 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.12 ஆகவும் அதிகரிக்கும்.

அதன்படி, கட்டண அதிகரிப்பு 50 சதம் முதல் ரூ.9 வரை அதிகரித்து, மாதாந்திர வீத அதிகரிப்பு ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி