கொழும்பு மாநகர சபை மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் நபர் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று (ஜூன் 12) கொழும்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். எவ்வாறாயினும், கொழும்பு மாநகர சபையின் மேயராக றிசா சாரூக்கை எதிர்க்கட்சி முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.