சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் ஒரே நேரத்தில் உருவாகும் போக்கு காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ நிபுணர் டொக்டர் மஹேஷ் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது ஒரு கொடிய நோய் இல்லை என்றாலும், சிறு குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், அவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என, பெற்றோர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.