சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய சிறைச்சாலை அத்தியட்சகர் காமினி பி.திஸாநாயக்க,
தனது இராஜினாமா கடிதத்தை பதில் சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பைத் தவறாகப் பயன்படுத்தி, அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவரை விடுவித்தமை தொடர்பில் எழுந்துள்ள சூழ்நிலையை கருத்திற்கொண்டு, ஊடகப் பேச்சாளர் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிறைச்சாலை திணைக்களத்தை மறுசீரமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலை அதிகாரிகளின் பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், நீதியமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிஷான் தனசிங்க, அங்கு பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.