எரிவாயு சிலிண்டர்களின் தரம் சம்பந்தமான பிரச்சினைகளும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்த கையோடு பாவனையாளர் அதிகார சபை தலையிட்டு லேபலொன்றை அறிமுகப்படுத்தியமையானது எரிவாயு நிறுவனங்களின் இலாபத்தை மறைக்கும் உபாயமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மற்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன கொடூரமான கூட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்தமையை, பாகிஸ்தானில் உள்ள முன்னணி இஸ்லாமிய அறிஞர்கள் கண்டித்துள்ளதோடு, இது "இஸ்லாமுக்கு எதிரான" செயல் மற்றும் "சட்டத்திற்கு புறம்பான கொலை" எனவும் அறிவித்துள்ளதோடு, வெள்ளிக்கிழமையை "கண்டன நாள்" என அறிவித்துள்ளனர்.

சமகி ஜன பலவேகயவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டின் அரசியலில் நேர்மையான, ஊழல் செய்யாத, மோசடி செய்யாத மற்றும் தேசபக்தியுள்ள மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் பரந்த வலிமைமிக்க படையொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி -திருகோணமலை வீதியின் 99ஆம் கட்டை சந்தியில் பெற்றோல் கடையொன்று,  இன்று (09) மதியம் தீப்பற்றிக்கொண்டது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி