போர்ச் செய்தி ஆய்வாளரும் இருமொழி பத்திரிகையாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னோடியுமான தர்மரத்னம் சிவராம், தலைநகருக்கு அருகில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடந்த ஒன்றரை தசாப்தமாக நீதி பெற்றுக்கொடுக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நாளை (30) இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உலகளவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனை எட்டியது மற்றும் இறப்பு எண்ணிக்கை 200,000 ஐ தாண்டியது.

ஏப்ரல் 30 க்கு பிறகு, நாட்டில் நெருக்கடி மற்றும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் மக்கள் மத்தியில்அரசாங்க செலவின் ஒப்புதல்களை அரசியலமைப்பு ரீதியாக அமுல்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள கடுமையான நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான திட்டங்களை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டவர்கள் மற்றும் பரப்பியவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் சட்டத்தை மீறியமை தொடர்பில் எச்சரிக்கை மாத்திரம் செய்து, பொலிஸார் சில குழுக்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் படி, பழைய பாராளுமன்றம் கலைக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது, ​​பொருளாதாரத்தை பராமரிக்க இலங்கை அரசு கடன் வாங்க முடியாது என்பது தெளிவாகிறது. எனஜனாதிபதியின் செயலாளர் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கும் நோக்கில், விமான சீட்டுகளுக்கு அதிக விலை செலுத்த வேண்டிய நிலைக்குள்ளான, அரச புலமைப்பரிசில் பெறும் அனைத்து மாணவர்களினதும் பயண செலவுகளையும் அரசாங்கம் திருப்பி செலுத்த வேண்டுமென, இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

அரச சேவைகள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் முருதொட்டுவே ஆனந்த தேரர் கூறுகையில் கொரோனா கட்டுப்படுத்தும் திட்டம் குழப்பத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புப் படையினரால் பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்துவது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி