தலைமன்னாரில் ரயில் ஒன்றுடன், தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.9 வயது மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேர் பயணித்துள்ளனர். அவர்களில், 20 பேர் மாணவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தலைமன்னார் விபத்தை அடுத்து மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் குருதி கொடையாளிகள் குருதி வழங்கி உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டேன்லி டி மெல் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த பேருந்து, ரயிலுடன் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் காயமடைந்த 24 பேர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி