தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆலோசனை  தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (27) வவுனியாவில் இடம்பெற்ற போது, சி.சிறிதரன் இந்த யோசனையை முன்வைத்தார்.

வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும் என்றும் கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என யோசனையும் முன் வைத்தார்.

முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் தெரிவித்துள்ளதாக அறியக்கடைக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி