மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் உற்பத்திச் செலவில் சேர்க்கப்பட்டாலும், பேக்கரிப் பொருட்களின் விலையை அதற்கு இணையாக அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று, மேற்படி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
அதனால், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பேக்கரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜயவர்தன கூறினார்.