ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்
தனது வீட்டில் இருந்து இன்று (05) மாலை பிரசார பணிகளுக்காக காரில் பயணித்தபோதே இந்தக் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
காரில் சசிகலா ரவிராஜ் இருந்த போதிலும் காயங்கள் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா ரவிராஜ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் கல் வீசி சேதப்படுத்தப்பட்டிருந்தது குறிபிபிடத்தக்கது.