உணவு வகைகளின் விலையை குறைக்க முடியாது!
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், உணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொத்து ரொட்டியின் விலையும் எகிறியது
நேற்றையதினம் (03) முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து ரொட்டி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் பராட்டா, ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் 10 முதல் 15 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் மாத இறுதியில் அமைச்சரவைக்கு!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாளை(05) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு – லிட்ரோ
சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 100 ரூபாவிற்கும் 200 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுகாதார துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவை – ஜனாதிபதி
சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றம் தேவையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் – இலங்கை இடையிலான இணக்கப்பாடு மகிழ்ச்சியளிக்கிறது!
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கைக்கும் இடையே ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
பாண் இறாத்தல் ஒன்றின் விலை 300 ரூபா!
450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றை 300 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடன் சுமையை குறைக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயார் – சீனா
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி மற்றும் கடன் நிவாரணம் ஆகியவற்றில் தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொத்த வியாபாரிகளுக்கு முட்டையை 46 ரூபாவிற்கு விற்க தீர்மானம்
மொத்த வியாபாரிகளுக்கு முட்டையொன்றை 46 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எல்ல ஒடிசி ரயில் சேவை அதிகரிப்பு
எல்ல ஒடிசி ரயிலின் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானம் – ஜனாதிபதி செயலாளர்
முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
Breaking news: இடைக்கால வரவு-செலவு திட்டம் 105 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் 105 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
SJB , SLPP வாக்கெடுப்பில் இருந்து விலக தீர்மானம்
2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்திற்கான வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க பல அரசியல் தரப்பினர் இன்று பாராளுமன்றத்தில் தீர்மானித்துள்ளனர்.
மே 09 : பாராளுமன்ற உறுப்பினர் விமலின் வீட்டிற்கு தீ வைத்த 03 பேர் கைது
மே 09 ஆம் திகதி பொது அமைதியின்மையின் போது ஹோகந்தரவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் இல்லத்தை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.