இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறை தினமாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சஞ அறிவித்துள்ளது.

தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து தவறான முடிவுகளுக்கும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷி சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டு மக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்திய அனைத்து தவறான பொருளாதார முடிவுகளுக்கும் நாடாளுமன்றமே பொறுப்பேற்க வேண்டும். மத்திய வங்கியின் பிழையான அணுகுமுறை மற்றும் நிதியமைச்சினால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன. அந்த முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மீது பாராளுமன்றத்தில் யாரும் குற்றம் சாட்ட முடியாது. அந்த முடிவுகளை எடுக்கும் முதன்மை பொறுப்பு பாராளுமன்றத்திற்கு இருக்கிறது அல்லவா? அதன் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று நிதி நிர்வாகம். அரசியலமைப்பின் 148 வது பிரிவின்படி. பொது நிதிகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் பாராளுமன்றம் கொண்டுள்ளது. அதன்படி. நிதி ஒப்புதலுக்காக ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

"ஏப்ரல் 12 ஆம் திகதி கடனை மீள செலுத்த முடியாது என்ற ஒரு தீவிரமான முடிவு."

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது. ​​2022ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய கடனாக 6.1 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்பதை நாடாளுமன்றம் நன்கு உணர்ந்துள்ளது.

ஏப்ரல் 12 அன்றுஇ நாடு கடனை மீள செலுத்த முடியாத நாடு என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு தீவிரமான முடிவு. அதைச் செய்தால் என்ன நடக்கும். செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது நாட்டின் சாமானிய மக்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு இது பொதுவான முடிவு என்றாலும். நாட்டின் சாமானிய மக்களுக்கு வாழ்வோ சாவோ என்ற இடத்திற்குத் தள்ளிவிடும் முடிவு இது.

இந்த முடிவு தவறானது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களே கூறுகிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை?

நிதி அமைச்சும் மத்திய வங்கியும் வெவ்வேறு நபர்களை அடிக்கடி குற்றம் சாட்டுகின்றன. பெட்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். குடிநீர் வளங்கள் அமைச்சு நட்டம் என்று கூறுகின்றனர். அதன் பிறகு எயார் லங்கா விமான சேவை பல கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானதா? நிதி நிர்வாகத்தின் சமீபத்திய கோட்பாடுகளை சந்திக்கும் அளவிற்கு போதுமான கோட்பாட்டு அறிவு நம்மிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் ஒரு வார காலமாக உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் பதின்மூன்று பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தனது இலங்கை விஜயத்தின் போது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியை சந்தித்துள்ளார்.

Feature

2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று, தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் ADB வழங்கக்கூடிய பல பகுதிகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி