வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ,

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவரை கைத செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றிருந்தது.

மேலும், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று முன்தினம் நாடு திரும்பிய நிலையில், நேற்றைய (30) தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் இன்றும் வாக்குமூலம் பதிவு செய்ய திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி