எந்தவொரு நாடும் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து வெளியேற முடியாது என ஐ .நா சபை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இலங்கை அரசு ஐ .நா. மனித உரிமை பேரவையில் இருந்து விலகுவதாக அறிவித்தது இவ்வறிக்கையை தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் நிலை குறித்து ஜெனீவாவில் அறிவித்து விட்டு வந்தார்.

இருந்தாலும் ஐ.நா ஒழுங்கு விதிகளின் படி நிறைவேற்றப்பட்ட யோசனை ஒன்றிலிருந்து எந்தவொரு நாடும் வெளியேற முடியாது என்று ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் பேச்சாளர் ரொனால்ட்டோ ஹோமிஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி