அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களின் பாதுகாப்பிற்காக விசேட பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள் 5,400
பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தான் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதில் உள்ள விடயங்களை கருத்தில் கொண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி