ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (05) மாலை ஒன்றுகூடியது.


குறித்த மத்திய செயற்குழு கூட்டத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

அரசாங்கத்துடன் கட்சியின் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர். அது தொடர்பில் கலந்துரையாடினோம். அரசாங்கத்துடன் இணைந்துள்ளவர்கள் தொடர்பில் ஏகமானதான தீர்மானத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, புதிய யாப்பின் கீழ் அரசாங்கத்துடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி