61 வயதான லிதுவேனியா நாட்டு பிரஜை ஒருவர் காலி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.


சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி பயணித்து கொண்டிருந்த கப்பல், காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த வேளை குறித்த நபர் கப்பலில் இருந்து இறங்க முற்பட்ட போது, கடலில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் தவறி விழுந்த நபர் காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி