இன்று (19) காலை பெரகலையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக

100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹப்புத்தளை - பெரகல வீதியில் முச்சக்கரவண்டி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி பெரகல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் எனவும், அவர் ஹப்புத்தளையில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்ற வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் போது வீதியில் பயணித்த கடற்படை வீரர்கள் காயமடைந்தவர்களை தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி