நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரத்து 590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

50.8 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

56 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு நோயினால் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அக்குரணை, மாத்தளை மாநகர சபை, அம்பலாங்கொட, வாரியபொல, அஹெலியகொட, எம்பிலிபிட்டிய ஆகியன இந்தப் பட்டியலில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  50 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி