பெறுமதி சேர் வரி (வற்) 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனைத்து உள்ளூர் மதுபானங்களின் விலைகளும் இன்று (01) முதல் அமலாகும் வகையில் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானப் போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயாலும் பியர் டின் ஒன்றின் விலை 30 ரூபாயாலும் அதிகரிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் இன்று (01) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சிகரெட்டின் வகைக்கேற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிகரெட் வகைக்கேற்ப விலை அதிகரிப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி