leader eng

பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலையை உயர்த்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் புதிய விலை ரூ.2.50. ஆகும். பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


முன்னதாக பரசிட்டமோல் மாத்திரையின் விலை ரூ.1.71 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் 6 வாரங்களுக்கு கிடைக்கும் இதேவேளை, எதிர்வரும் மூன்று அல்லது ஆறு வாரங்களில் நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, இலங்கை மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் இன்னும் சில வாரங்களில் காலாவதியாகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சஞ்சீவ விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாததே இந் நிலைமைக்கு முக்கியக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சீவ விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

சரக்கு போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற உலகளாவிய பிரச்சினைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

https://bit.ly/3uHGkH6

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி