கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று (08) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 46ஆது அமர்வு இடம்பெற்றது.

நாடாளுமன்ற சபை இடம்பெற்ற போது தமீழிழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வியாபாரி என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் மீன்பிடி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கருத்தை கண்டித்து, மீளப்பெறுமாறு வலியுறுத்தி இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையில் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கறுப்புக்கொடி எந்தி ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் (Velamalikithan Arunasalam) தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி