அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கிய முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, 3 ஆவது தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நாளை (22) காலை 9.30 மணியளவில் வருகைதருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான உலகளாவிய மன்றம்,  23.10.202 அன்று சூம் தொழில்நுட்பம் வழியாக ஏற்பாடு செய்த மாநாட்டில் சிறில் காமினி வெளியிட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அதற்கமைய,  அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவிடம் ஏற்கெனவே 2 முறை வாக்குமூலம் பெற்ற குற்றப்புலனாய்வு திணைக்களம், மீண்டும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி