ஒகஸ்ட் 3ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமையால் கைது செய்யப்பட்ட ஐவரையும் மீண்டும் நவம்பர் 9ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கடுவலை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி, வசந்த முதலிகே, ஹசான் ஹர்ஷன, அமில சந்தீப ஆகியோர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்தின் மீது ஒகஸ்ட் 3ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் மு.சோ.கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த மற்றும் மாணவர் மக்கள் இயக்கத்தின் கோஷிலா ஹன்சமாலி ஆகியோர் பொலிஸார் சுமத்திய குற்றச்சாட்டிற்குக்கு சாட்சிகளில்லாமல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸினால் கடுவலை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சோஷிலா ஹன்சமாலியின் பெயர் இருக்கவில்லை. இவற்றை நன்றாக ஆராய்ந்து பொலிஸாரின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கி சட்டத்தரிணிகள் வாதாடிய போதிலும், அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிபதி மஞ்சுல ரத்நாயக மறுத்துள்ளார்.

கடுவலை நீதிபதி இது சம்பந்தமாக பின்பற்றும் கொள்கை சட்டத்துறையின் அவதானிப்பிற்கு உட்பட்டுள்ளது. இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த போதிலும், நீதிபதி விடுமுறையில் சென்றிருந்தமையால், தடுப்புக் காவலில் உள்ள ஐவரும் மேலதிக காலம் தடுப்புக் காவலில் இருக்க நேரிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி