அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமது ஒரே கோரிக்கை என இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலையான அரசியல் கைதியான முல்லைத்தீவைச் சேர்ந்த நடேசு குகநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த நடேசு குகநாதன், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட அவர், 3 மாதங்களின் பின்பு மீண்டும் கைது செய்யப்பட்டு கடந்த சில வருடங்களாக வழக்குகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி