பைசர் தடுப்பூசி அரசு மருத்துவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவம் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்த பின்னர் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

சுகாதாரத் துறை அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட சிலாபத்தில் உள்ள கொகாவில மையத்தில் ஃபைசர் தடுப்பூசி வெளியாட்களுக்கு வழங்கப்பட்டதாக வெளிவந்த பின்னர் இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

பைசர் தடுப்பூசியை ராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் வைத்தியர் நவின் டி சொய்சா, "சிலாபத்தில் ஏதேனும் தவறு நடந்தால், அதை திருத்துவதைத் தவிர்த்து, பைசர் ஊசியை ராணுவத்திடம் மட்டும் ஒப்படைப்பது தவறு.

வைத்தியர் டி சொய்சா, "காலியில் அஸ்ட்ரசெனிக்கா ஊசி போடப்பட்டபோது எழுந்த அதே பிரச்சனை சிலாபத்திலும் எழுந்துள்ளது. அப்படியானால் அஸ்ட்ராசெனிக்கா ஊசியின் முழுப் பொறுப்பும் இராணுவத்திற்கு ஏன் கொடுக்கவில்லை?"

விசாரணை இடம் பெற்றுவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA),சுகாதார அமைச்சே தடுப்பூசிக்கு பொறுப்பு என்று சுட்டிக்காட்டி, ஃபைசர் தடுப்பூசியை இராணுவத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

வைத்தியர் நவீன் டி சொய்சா, "தடுப்பூசி செயல்முறை இராணுவமயமாக்கப்பட்டிருப்பதால் அது அவர்களுக்கு மேலதிகமாக ஆயுதங்களைக் கொடுத்திருக்கும் செயலாகும் என்று கூறினார்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, "பைசர் ஊசி இராணுவத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை."

உலக சுகாதார அமைப்புடன் இணைந்து குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் கோவக்ஸ் அறக்கட்டளை மூலம் 100,000 டோஸ் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசியை இலங்கை பெற்றுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி