கொவிட் தொடர்பான புள்ளிவிவரங்களை மாற்றி ஜனாதிபதி மக்களின் உயிர்களுடன் விளையாடி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இப்படியான தொற்று நோய்க்கு முன்னறிவிப்பே தேவையானது என்பதுடன் அதற்குச் சரியான புள்ளிவிவரங்கள் இருக்க வேண்டும்.

எனினும் ஜனாதிபதி புள்ளிவிவரங்களை மறைத்து, வைரஸைப் புறந்தள்ளி வருகிறார்.

கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்கள், கோவிட் ஒழிப்பு குழுவில் செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மாத்திரமல்லாது சுகாதார அமைச்சரின் நிலைப்பாடாக உள்ளது.

அது மாத்திரமல்ல கடும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அவசியம் என்று பிரதமரும் கருதுகிறார்.

எனினும் ஜனாதிபதி இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாது மக்களுடன் மரண விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி