திலித் ஜயவீரவிற்கு சொந்தமாக ‘லிபர்டி பப்லிஷர்ஸ்’ பத்திரிகை நிறுவனத்தின் தமிழ் பத்திரிகையான ‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியரான ஆர். சிவராஜ் அவர்களின் வீட்டிற்கு கடந்த 11ம் திகதி நள்ளிரவு குற்ற விசாரணைத் திணைக்களத்திலிருந்து எனக் கூறி சிலர் நுழைய முயன்றுள்ளனர்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வீட்டுத் தொகுதியொன்றில் குடியிருக்கும் அவர் நேற்றிரவு ITN தொலைக் காட்சியின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு நேற்று (12) அதிகாலை 1.00 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

தம்மை குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் எனக் கூறி அதிகாலை 2.30 மணியளவும் அந்த வீட்டுத் தொகுதிக்குள் சிலர் நுழைய முயன்ற போதிலும், அவர்களது நடத்தையில் சந்தேகப்பட்ட வீட்டுத் தொகுதியின் பாதுகாப்பு அதிகாரி அவர்களை அனுமதிக்க மறுத்தமையால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

தமிழன் ஆசிரியர் இது சம்பந்தமாக நேற்று காலை குற்ற விசாரணை திணைக்களத்தில் விசாரித்த போது, அத்தகைய அதிகாரிகள் குழுவொன்று தமது திணைக்களத்திலிருந்து வரவில்லையெனக் கூறியுள்ளது.

‘அருண’ சிங்களப் பத்திரிகை மற்றும் ‘த சன்டே மோனிங்’ ஆங்கில பத்திரிகையை திலித் ஜயவீரவிற்கு சொந்தமான ‘லிபர்டி பப்லிஷர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

இது சம்பந்தமாக தமிழன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.சிவராஜ் பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி