நாடு முழுவதிலும் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது.அந்த வகையில் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய தேவை மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு கடமைகளுக்கு செல்வோருக்கு இந்த சட்டம் அனுமதியளிக்கின்றது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 150ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு புதிய சட்டங்கள் அடங்கிய அறிவிப்பு இன்று மாலை வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி