சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்கிற சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது.

சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்கிற சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது. இந்த புயல் ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

லூபிட் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே ஜப்பானின் ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் ஆகிய 3 பிராந்தியங்களிலும் லூபிட் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கூறிய 3 பிராந்தியங்களில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே லூபிட் புயல் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி