நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சில வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து கேட்டபோது அவர் டெய்லி மிரரில் ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் சமகி ஜன பலவேகய ஆகிய கட்சிகள் விவாதித்து வருவதாக லங்கா சி நியூஸ் இணையத்தளத்தை மேற்கோளிட்டு டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, நன்கு ஆட்சி செய்யும் அரசாங்கத்தை நிறுவுவதில் முன்னிலை வகித்த பல சிவில் சமூக அமைப்புகளும் விவாதங்களில் பங்கு பற்றியுள்ளன.

மேலும், கொழும்பை தளமாகக் கொண்ட பல முன்னணி தேரர்கள் இருவரும் சேர்ந்து இந்த அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இருவரும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை, விரைவில் கூட்டத்தை நடத்த சம்பந்தப்பட்ட கட்சிகள் முயற்சித்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, சம்பிக ரணவக்கவுடன் கூட்டணி அரசியலில் ஈடுபடும் என்னம் தனக்கு ஒருபோதும் இல்லை என்று கூறினார்.

இந்த செய்தி முற்றிலும் 'திட்டமிடப்பட்ட தவறான செய்தி' என்று அவர் மேலும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி