நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரித்து விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ரவிக்குமார், நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் முன்வைத்தார்.

மிக நீண்ட காலமாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உயர் மட்டங்களில் பேசப்பட்டு வருகின்றது அதேபோன்று மிக விரைவில் அவர்கள் விடுவிப்பர் என்ற உறுதி மொழிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் இதுவரை அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டிய ரவிக்குமார், தங்களது தலைமையில் இந்த கைதிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டுமென்று நீதி அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி