ஜனாதிபதியை சாபத்திற்குள்ளாக்கிய ஐந்து பேர் இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாந்து தெரிவித்தார். நேற்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஊடகம் நடத்தும் அன்டிஜன் மேன்,உதயங்க வீரதுங்க, நிசங்க சேனாதிபதி, தம்மிக மற்றும் அநுராதபுர பக்கத்தில் யாரோ ஒருவர் இவர்களால்தான் ஜனாதிபதி சாபத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஒரு நாடு, ஒரு சட்டம்' என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தது, ஆனால் இப்போது நாட்டில் 5 சட்ட அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன, அதாவது

1) ராஜபக்ஷ சட்டம், 2) நண்பர்கள் சட்டம், 3)கொவிட் சட்டம், 4) வறிய மக்களுக்கான சட்டம் 5) உக்ரேனிய சட்டம் என்பனவே அவை

இதுபோன்று சென்றால் நாடு தோல்வியடையும் என்று சுட்டிக்காட்டிய அவர், இப்போது நாடு சரியான திசையில் செல்ல வேண்டும் என்று கூறினார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி