முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சுதத்த திலகசிறி என்ற யூடியுபர் வெளியிட்ட கருத்து தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச, தமது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அதில், இதுபோன்ற கருத்துக்கள் தற்செயலாக வௌியிடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.
'முன்னாள் ஜனாதிபதியின் கைது நடக்கு முன்பே யூடியூபர் ஒருவர் அதை முன்னறிவித்தாராம்? அது சாதாரண சம்பவமாக சொல்ல முடியாது அல்லவா? உண்மையிலேயே திட்டமிட்டது என்றால், சட்டமும் ஒழுங்கும் போன்ற புனிதமான ஒன்று, மலிவான நாடகமாகி விடுகிறது என்பது மிகுந்த வருத்தம் தரக்கூடியது.” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.