ஹம்பாந்தோட்டை - சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளுடன் நடந்த பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில்,
சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த STF அதிகாரி ஒருவரும் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இரண்டு சந்தேகநபர்கள் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டின் போது ஒரு சந்தேகநபர் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேகநபர்கள் அதிகாரிகள் மீது கையெறி குண்டு ஒன்றையும் வீசியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சந்தேகநபர், அண்மையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.