பசில்ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவை தொடங்கியவர்களில் பசில் ராஜபக்சவும் ஒருவர் அந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டமைக்கு அவரும் காரணம் என ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கட்சியை ஆரம்பித்து நான்குவருடங்களிற்குள் பசில் ராஜபக்ச ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவரை நாடாளுமன்றத்தில் பார்க்கவிரும்புகின்றோம் அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கவேண்டும் என ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காகவே 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டது பசிலுக்காக பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவார் என்ற ஊகங்கள் காணப்படுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி