அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், இரு வேட்பாளர்களுக்கான பிரசார குழுவும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான போதுமான முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இருக்கட்சிகளும் நெருக்கமான போட்டியில் இருக்கும் மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

“ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் தாமதமான வாக்குகளை எண்ணுவதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஏன்? அவர்களுக்கு தெரியும், அனைத்து சட்டப்பூர்வ வாக்குகளையும் எண்ணி முடித்தால் நாம் வெற்றி பெறுவோம்,” என டிரம்பின் தேர்தல் பிரசார மேலாளர் பில் ஸ்டீஃபியன் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் பிரசாரக் குழு சொல்லும் தகவல்களின்படி டிரம்ப் அரிசோனாவில் 30,000 வாக்குகள் வித்தியாசத்திலும், பென்சில்வேனியாவில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நவாடாவில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெறுவார் என ஸ்டீஃபியன் தெரிவித்துள்ளார்.

“எங்களின் வழியில் நாங்கள் உறுதியாக இருக்கிறேம்.” எனஅவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல பைடனின் குழுவும் தங்கள் கணிப்பை தெரிவித்துள்ளனர்.

பைடனின் பிரசார மேலாளர் ஜென் ஓ மேலி, பைடன் நிச்சயம் வெள்ளை மாளிக்கு செல்வார் என தெரிவித்துள்ளார்.

“2016ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதைக் காட்டிலும் அதிக வாக்கு எண்ணிக்கையில் நாங்கள் வெற்றி பெறவிருக்கிறோம். அதே போல விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா மாகாணத்திலும் டிரம்ப் 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்றதைக் காட்டிலும் அதிகம் வெற்றி பெறுவோம்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இரு குழுவும் இந்த கணிப்புகளுக்கு எப்படி வந்தனர் என்பது தெரியவில்லை இந்த எண்ணிக்கையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இழுபறியாக அமையுமானால் எதிர்த் தரப்பான ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் முறைகேடு செய்ததாகவும், வெற்றியை தம்மிடம் இருந்து திருடிக்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்போவதை கடந்த சில வாரங்களாகவே குறிப்பால் உணர்த்திவந்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

புதன்கிழமை அதிகாலைப் பொழுதில் மிகச்சரியாக அதைத்தான் செய்தார் டிரம்ப்.

இன்னும் பல மில்லியன் வாக்குகள் எண்ணி முடிக்கப்படுவதற்கு முன்பே தாம் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக்கொண்டார் அவர்.

"இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம். வெளிப்படையாக சொன்னால், நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்," என்று தெரிவித்தார் டிரம்ப்.

எந்த வித ஆதரமும் காட்டாமல் தேர்தல் முறைகேடு நடந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

120 வருடங்களில் இல்லாத அளவிற்கு பதிவான வாக்குகள்

1900ஆம் ஆண்டு வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியை சேர்ந்த வில்லியம் மெக் கின்லி (இடது)

1900ஆம் ஆண்டு வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியை சேர்ந்த வில்லியம் மெக் கின்லி (இடது)Image caption: 1900ஆம் ஆண்டு வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியை சேர்ந்த வில்லியம் மெக் கின்லி (இடது)

அமெரிக்க அதிபர் தேர்தலில் 120 வருடங்கள் இல்லாத வகையில், இந்த வருடம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

1900ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்களிக்கும் உரிமை கொண்டவர்களில் 66.9 சதவீதம் பேர் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

1900ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வில்லியம் மெக் கின்லி ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜென்னிங்க்ஸ் பிரயானை தோற்கடித்தார். அப்போது 73.7சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் இந்த முறையை போன்று அல்லாமல் தேர்தல் முடிவுகள் தெளிவாக அமைந்தன.

அமெரிக்க தேர்தல்கள் குறித்த தகவல்களை வழங்கும் யுனைடெட் எலக்‌ஷன்ஸ் பிராஜக்ட்டின் தலைவர் மைகேல் மெக் டொனால்டு, டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கு சதவீதம் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை பொறுத்து மேலும் மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறை தபால் வாக்குகள் அதிக அளவில் வந்துள்ளன எனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சமன் ஆனால் என்னாகும்?

அமெரிக்க அதிபர் பதவிக்கு வர மொத்தமுள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில், 270 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்துக்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் சபை உறுப்பினர்கள் உள்ளனர்.

இரண்டு வேட்பாளர்களும் 269 வாக்குகள் பெற்றால் சமநிலை உண்டாகும். இதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை என்றாலும், இப்படி நடந்தால் அதிபர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

பிரதிநிதிகள் சபையின் மாநிலக் குழுக்கள் அதிபரைத் தேர்ந்தெடுக்கும். அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்திற்கு ஒரு குழு. எனவே, 26 குழுக்களின் ஆதரவைப் பெற்றவர், அதிபர் பதவிக்கு வருவார்.

எந்தெந்த மாகாணங்களில் என்ன நிலவரம்?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு என்பது ஒவ்வொரு மாநிலங்களைப் பொறுத்தே அமையும்.டொனால்ட் டிரம்ப் ப்ளோரிடா,ஓஹியோ மற்றும் டெக்ஸஸ் போன்ற வெற்றி பெறுவார் எனக் கணிக்கப்பட்டாலும், அதிபர் பதவியைப் பெற மேலும் பல முக்கிய மாகாணங்களில் வெற்றி பெற வேண்டியுள்ளது. பைடனின்பல இடங்களில் வெற்றி பெறும் சூழல் இருந்தாலும், எதுவும் உறுதியாக தற்போதைக்கு சொல்ல இயலாது.

அரிசோனா: பொதுவாக குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்களே இந்த மாகாணத்திலிருந்து தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்தலில் இது முக்கிய களமாக உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பைடன்83 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சில அமெரிக்க ஊடகங்கள் அவர் பெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. இருப்பினும் பிபிசி இதை உறுதிப்படுத்தவில்லை.

ஜார்ஜியா: இந்த மாகாணத்திலும் குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவரையே தேர்வு செய்வர்.

நெவாடா:பைடன் தற்போது ஒரு கடுமையான போட்டியை இங்கு எதிர்கொள்கிறார். நூலிழையில் முன்னிலையில் இருக்கிறார் அவர்.

விஸ்கான்சின்: மத்திய மேற்கு பகுதியில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் 2016ஆம் ஆண்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அதற்கு முன்பு வரை இருபது வருடங்களாக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களைத்தான் தேர்வு செய்தனர். தற்போது பைடன் இங்கும் நூலிழையில் முன்னிலையில் இருக்கிறார்.

மிஷிகன்: பைடன், டிரம்ப் இருவரும் கிட்டதட்ட சமநிலையில் உள்ளனர். இருப்பினும் இந்த மாகாணத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்கும் கணிசமான மக்கள் இருக்கும் பகுதியில் வாக்குகள் எண்ணப்படவில்லை.

பென்னிசில்வேனியா: இந்த மாகாணம் ஒரு முக்கிய போட்டிக்களம். இதில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். இருப்பினும் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். மேலும் முடிவுகள் வெள்ளிக்கிழமைக்குள் வருவதற்கு சாத்தியமில்லை.

அதிபர் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டால் அதில் தொடர்புடையவர்கள் யார்?

பிரசுரிக்கப்பட்ட நேரம் 13:4613:46

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஏன் இன்னும் தெரியவில்லை?

சித்தரிப்பு

BBCCopyright: BBC

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. அமெரிக்கத் தேர்தல்களில் முடிவுகள் உடனடியாகத் தெரியத் தொடங்கிவிடும். இதற்கு மாறாக, வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஏன் இப்படி?

தேர்தல் நாளன்று இரவே முடிவுகள் தெரியாமல் போவது எப்போதும் சாத்தியம்தான்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அஞ்சல் வழியாக தங்கள் வாக்குகளை செலுத்திவருகின்றனர். எனவே, எல்லா வாக்குகளையும் எண்ணி முடிப்பதற்கு தாமதமாவது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

அமெரிக்காவின் மத்திய மேற்கு அமைந்திருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த விஸ்கான்ஸின் மாகாணத்தில் 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், அங்கு ஜோ பைடன் 20,000 வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் அந்த மாகாணத்தில் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார் டிரம்ப்.

தற்போதைய நிலையில், பைடன் முன்னிலை வகித்தாலும், நிலைமை எவ்வாறு வேண்டுமானாலும் மாறும். அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவரை முடிவு செய்யும் முக்கிய மாகாணமாக விஸ்கான்ஸின் உள்ளது.

தேர்தல் முடிவுகள் எப்போது வெளிவரும்?

இந்த வருடம் தபால் வாக்குகள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளதால் அதிபர் தேர்தல் முடிவுகள் வர சில தினங்களோ அல்லது சில வாரங்களோ ஆகலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாகாணமும் தபால் வாக்குகளை எண்ணுவது குறித்து தனித்தனி விதிகள் வைத்துள்ளன. எனவே முடிவுகள் ஒரே சமயத்தில் அறிவிக்கப்படுவதில்லை. சில மாகாணங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட சில வாரங்கள் ஆகலாம்.

இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டுதான் தேர்தல் முடிவுகளில் பெரும் இழுபறி நிலவியது. ஒரு மாதம் கழித்து வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குபின்தான் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதே சமயம், அமெரிக்க ஊடகங்கள் வெற்றி பெற்றவர் குறித்து விரைவில் கணித்துக் கூறும்.

ஒரு மாகாணத்தில் எப்போதும் ஒரே கட்சிதான் வெற்றி பெறும் என்றால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வைத்து அதன் முடிவு விரைவாக கணிக்கப்பட்டுவிடும்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, தனது கூற்றுக்கு முழுமையான ஆதாரங்கள் இல்லாமலேயே, தாம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளதற்கு ஃபேஸ்புக் எதிர்வினையாற்றி உள்ளது.

தேர்தலில் தாம் வென்று விட்டதாக டிரம்ப் கூறிய உடனேயே, இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பதையும் வெற்றியாளர் யார் என்பது இன்னும் கணிக்கப் படவில்லை என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் `நோட்டிஃபிகேஷன்` வெளியிட தொடங்கியுள்ளோம் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் என்பிசி நியூஸ்ஊடக நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளும் நெருக்கமான போட்டியில் உள்ள மாகாணங்களானபென்சில்வேனியா,மிச்சிகன்,விஸ்கான்ஸின்மாற்றும் பிற மாகாணங்களில் இன்னும் பல லட்சக் கணக்கான வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கின்றன. இவை தேர்தல் முடிவுகள் மீது தாக்கம் செலுத்தும்.

இந்த மாகாணங்களில் வெற்றியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்க இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக "எதிர்க்கட்சியினர் தேர்தலை திருட முயல்கின்றனர்" என்று டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டது, தவறாக வழிநடத்தும் தகவல் என்று அந்த ட்வீட்டின் மீது குறிப்பாணை ஒன்றை வெளியிட்டு, அதை ட்விட்டர்மறைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரசுரிக்கப்பட்ட நேரம் 12:0112:01

வந்துகொண்டிருக்கும் செய்தி

ஹவாய் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி என கணிப்பு

ஹவாய் மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு அந்த மாகாணம் உருவாக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை இரு முறை மட்டுமே அங்கு குடியரசுக் கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நடந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய டிரம்ப், தேர்தல் “மோசடிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கட்சியினரை குறிப்பிட்டு, “அவர்களால் வெற்றிபெற இயலாது என தெரியும், எனவே அவர்கள் நீதிமன்றம் செல்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.” என்று பேசியுள்ளார்.

தேர்தல் பிரசாரங்களின்போது நீதிமன்றம் செல்வது குறித்து பேசியிருந்தார் டிரம்ப், வடக்கு கலிஃபோர்னியாவில், தேர்தல் முடிந்த இரவில் "நாம் நமது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றம் செல்வோம்," என தெரிவித்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீதிமன்றம் செல்வது குறித்து பைடன் எதையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் டிரம்பை போலவே பைடனும் ஒரு சட்டக் குழுவை தயாராகவே வைத்துள்ளார்.

இந்த தேர்தல் குறித்து கண்காணித்து வரும் 'ஸ்டன்ஃபோர்ட் எம்ஐடி ஹெல்தி எலக்‌ஷன்ஸ்பிராஜக்ட்', நடப்பு தேர்தல் குறித்து ஏற்கனவே 437 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும், அதில் தற்போது விசாரணையில் இருக்கும் சில வழக்குகள்இருகட்சிகளாலும்தொடுக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கிறது.

அதிபராக வெற்றி பெற 270 தேர்தல் சபை வாக்குகளைப் பெற வேண்டும். அதில் பைடன் 224 வாக்குகளையும் டிரம்ப் 213 வாக்குகளையும் பெறுவார் என கணிக்கப்படுகிறது. ஆனால் தேர்தலில் முழுமையான முடிவுகள் பல மில்லியன் கணக்காக குவிந்துள்ள தபால் வாக்குகளை எண்ணிய பின்பு தான் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

வெள்ளை மாளிகையில் பேசியடிரம்ப், எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி தான் வெற்றி பெற்றதாக உரையாற்றினார். மேலும் அவர் “தேர்தல் மோசடிக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இன்னும் கணக்கிடப்படாத வாக்குச்சீட்டுகள் குறித்து டிரம்ப் சந்தேகம் எழுப்புவது, `மோசமானது, ஆதாரமற்றது மற்றும் தவறானது` என பைடன் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனது ஆதரவாளர்களிடம் பேசிய பைடன், “கடைசி வாக்கு எண்ணப்படாதவரைத் தேர்தல் முடியவில்லை என்றே அர்த்தம்” மேலும் நாம் “வெற்றியின் பாதையில் இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே போன்ற நிலை, 2020 அதிபர் தேர்தலிலும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கையில் இல்லையா?

ஒட்டுமொத்த உலகமுமே கூர்ந்து கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், எப்படி நடக்கும், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி, என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

View more on YoutubeView more on youtube

Article share tools

பகிர்கView more share options

இதை பகிர

இந்த இணைப்பை பிரதியெடுக்க

?ns_mchannel=social&ns_source=twitter&ns_campaign=bbc_live&ns_linkname=5fa2875a67645202b6c4d409%26%262020-11-04T10%3A50%3A03.910Z&ns_fee=0&pinned_post_locator=urn:asset:1e0aa3aa-14f9-45cf-ba15-c8d04878fc32&pinned_post_asset_id=5fa2875a67645202b6c4d409&pinned_post_type=share

இந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள

பிரசுரிக்கப்பட்ட நேரம் 10:3810:38

முக்கிய போர்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி?

முக்கிய போர்கள மாகாணங்களில் யாருக்கு வெற்றி?

BBCCopyright: BBC

முன்னதாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையோடு வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டாலும், தற்போதைய நிலவரம் அது போன்று இல்லை.

மிக குறைந்த அளவிலான வித்தியாசத்தில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதில் முக்கியமானவை போர்க்கள மாகாணங்கள் யார் வசம் செல்கின்றன என்பதுதான்.

அரிசோனா, ஜோர்ஜா, விஸ்கான்சின், மிசிகன் மற்றும் பென்னிசில்வேனியாவில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அரிசோனா: 1996ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிக்கு ஆதரவாக இந்த மாகாணம் வெற்றி வாய்ப்பை வழங்கியதில்லை. அது ஜோ பைடனுக்கு சாதகமாக வாய்ப்பாகியிருக்கிறது. இளம் முற்போக்கு லத்தீன் அமெரிக்கர்கள் அங்கு அதிகம் வாழ்வதால் அவர்களின் ஆதரவு பைடனுக்கு சாதகமாக உள்ளது.

விஸ்கான்சின், பென்சில்வேனியா: இந்த மாகாணங்களில் இன்னும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அதன் முடிவு தெரிய சில நாட்களாகலாம்.

ஜோர்ஜா: முன்னதாக இந்த மாகாணத்தில் டிரம்ப் எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறியுள்ளது. டிரம்புக்கும் பைடனுக்கு இங்கு கடும் போட்டி நிலவுகிறது.

புளோரிடாவை பொருத்த வரை அங்கு டொனால்ட் டிரம்பு முன்னிலை வகிக்கிறார். கியூபா-அமெரிக்கர்கள் வாழும் மியாமி டேட் பகுதி வாக்காளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக அறிய முடிகிறது.

டெக்சாஸிலும் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு நிலவுகிறது. 38 தேர்தல் சபை வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணம், கடந்த 10 தேர்தல்களில் குடியரசு கட்சிக்கு சாதகமான முடிவையே அளித்து வருகிறது.

இந்த தேர்தலில் அதிபர் பதவியை தக்க வைக்க தேவைப்படும் மேஜிக் எண் 270 வேண்டுமெனில், டொனால்ட் டிரம்புக்கு ஓஹையோ, வடக்கு கரோலைனா ஆகிய மாணாங்களின் வாக்குகளும் சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் பைடனுக்கு ஆதரவாக இருப்பதாகவே செய்திகள் வருகின்றன.

இதுவரை இருக்கும் நிலவரப்படி ப்ளோரிடா, ஒஹையோ, டெக்சாஸ் மற்றும் ஐயோவாவில் டிரம்ப் முன்னிலை வகிக்க, அரிசோனா, பெனிசில்வேனியா, நார்த் கேரோலினா மற்றும் ஜோர்ஜாவில் கடுமையான போட்டி நிலவுகறது

யார் அடுத்த அமெரிக்க அதிபர்? இதற்கு பதில் தெரியும் அளவிற்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை.

இந்த முறை தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், முடிவுகள் தெரிய சில வாரங்கள் ஆகலாம். வாக்கு எண்ணிக்கை குறித்து யாரேனும் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றால் சரியான முடிவு தெரிய சில மாதங்கள் கூட ஆகலாம்.

இருப்பினும், யார் வெற்றியாளராக இருக்கக்கூடும் என்ற கணிப்பு, அடுத்த அதிபர் யார் என்று தெரிந்து கொள்ள உதவும்.

மொத்தம் 570 எலக்டோரல் குழு உறுப்பினர்கள் வாக்குகளில் 270 எடுத்தால் வெற்றி.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஜோ பைடனுக்கு 224, டிரம்புக்கு 213 என்றவாறு முன்னிலை நிலவரம் உள்ளது.

டிரம்ப் ட்வீட்டை திசை திருப்பல் என்று குறிப்பிட்ட ட்விட்டர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தல் தொடர்பாக ட்விட்டரில் இட்ட பதிவு ஒன்றை திசை திருப்பல் என்று பொருள்படும் மிஸ்லீடிங் என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்பிட்டுள்ளது ட்விட்டர்.

சர்ச்சைக்குரிய அந்தப் பதிவில் எதிரணியினர் தேர்தலைத் திருட முயல்வதாக குற்றம்சாட்டியிருந்தார் டிரம்ப்.

வாக்குப் பதிவு முடிந்த பிறகும் வாக்குகள் பதிவிடப்பட்டதாகவும் அதில் அவர் குற்றம்சாட்டியிருந்தார். வாக்குப் பதிவு முடிந்துவிட்டதாக குறிப்பிடுவதற்கு polls are closed என்று எழுதுவதற்குப் பதில் poles are closed என்று எழுத்துப்பிழையோடு எழுதியும் இருந்தார்.

பிழையான எழுத்துகளோடு அவர் எழுதிய poles என்ற ஆங்கிலச் சொல் போலந்து நாட்டவரைக் குறிப்பதால் அந்நாட்டுப் பதிவர்கள், இதை கேலி செய்து பதிவு இடுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி