இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் நேரடி விளைவாக உலக சந்தையில் எண்ணெய் விலைகள்

அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இந்த நாட்டில் எண்ணெய் விலை திருத்தத்தின் போது எரிபொருள் விலை அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் ஈரான் ஒரு முக்கிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது. இது உலகளாவிய விநியோகத்தில் 3 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்களிடமிருந்து இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்கிறது. மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்துடன் எரிபொருள் கொள்வனவு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இன்னும் அது செயல்படவில்லை.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக பிரித்தானிய பிரென்ட் சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்க சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.42 டொலர்களாகவும் அதிகரித்துள்ளது.

அந்த விலை ஏற்ற இறக்கங்கள், ஜூன் மாத இறுதியில் நாட்டில் எண்ணெய் விலை திருத்தத்தை பாதிக்காது. ஆனால் விலை உயர்வு அடுத்து ஓர்டர் செய்யப்படும் எண்ணெய் பங்குகளுக்கு பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் எரிபொருள் விலை திருத்தத்தில், செலவை கருத்தில் கொண்டு எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு, விலை சூத்திரத்தின்படி உள்நாட்டு விலையை பாதிக்கும்.

ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் இலங்கையில் எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்படுகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி