பிரபல தென்னிந்திய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், இலங்கையில் தயாரிக்கப்பட்டு வரும் "The Caged Bird" திரைப்படத்தில் முக்கிய
வேடத்தில் நடிக்க இன்று (17) காலை இலங்கை வந்தடைந்தார்.
இந்தத் திரைப்படத்தை இலங்கை திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் இயக்குகிறார்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹரேந்திர விஜேவர்தன மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் சர்வதேச ஒளிப்பதிவு மற்றும் ஊக்குவிப்பு உதவிப் பணிப்பாளர் சமிந்த முனசிங்க ஆகியோர், கட்டுநாயக்க விமான நிலைய "சில்க் ரூட்" முனையத்தில் வைத்து, நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரை வரவேற்றனர்.
இதேவேளை, இந்திய நடிகர் மோகன்லால் (Mohanlal) மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும், திரைப்படப் படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் (15) இலங்கைக்கு வருகை தந்தனர்.
"பேட்ரியட்" (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர்கள் வருகை தந்ததாகவும் இந்த திரைப்படம் இந்தியாவின் எட்டு மொழிகளில் Pan-India திரைப்படமாக வெளியாகும் வகையில் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.