ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜேர்மனி விஜயம் தொடர்பில், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில
தெரிவித்ததாக கூறப்படும் பொய்யான கருத்துக்கள் குறித்து, குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது, அந்நாட்டிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களை அவர் சந்தித்ததாக, ஊடகங்களுக்கு உதய கம்மன்பில அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் உதய கம்மன்பிலவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என, குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.