இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய போர்ச் சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் உள்ள சர்வதேச விமான
நிலையங்கள் தற்போது செயல்படவில்லை என்று இஸ்ரேலில் உள்ள மக்கள் தொகை மற்றும் இடம்பெயர்வு ஆணையம் (PIBA) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கான பணிகளுக்கு இலங்கையர்களை பரிந்துரைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இஸ்ரேலிய வேலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
அத்துடன், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து, விடுமுறையில் இலங்கை திரும்பியுள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் பிரிவு 39 (1) (b)இன் படி, பணியகத்தின் மறு அறிவித்தல் வரை இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள் பணியகத்தில் முன்னெடுக்கப்படாது என்பதோடு, எதிர்காலத்தில் மக்கள்தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையின் (PIBA) அறிவிப்பின் பேரில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்கான பரிந்துரைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.