மரணதண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த  22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அவர் வழிநடத்தும் சமகி ஜன பலவேகயவின் நிலைப்பாடு.

இந்த நிலைப் பாட்டை அடுத்து வழக்கறிஞரான தலதா அத்துகோரலா கவலைப்படுவதாக கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர் , ​​மரண தண்டனை குறித்து அன்றும் இன்றும்  தான் கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் நீதி அமைச்சராக இருந்த தலதா அத்துகோரல, மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மரண தண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

மரண தண்டனை என்பது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், எனவே மரண தண்டனையைப் பயன்படுத்துவதை தான் எதிர்ப்பதாகவும் தலதா அத்துகோரல ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி