இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீரின் விலை
10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை, சுமார் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.