ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும்,
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் பேரணியில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
"பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் துறை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது," என்று அவர் கூறினார்.