ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பு பேராயர்
கார்டினல் மெல்கம் ரஞ்சித், பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவு, அடுத்த மாதத்தில் கொண்டாடப்படும் என்று கூறும் கார்டினல், அதற்கு முன்னர் இந்த விஷயத்தில் ஒரு நியாயமான சமிக்ஞை கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என்று கூறுகிறார். இல்லையெனில், அவர்கள் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் என்றும் பேராயர் கூறினார்.
"ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கட்டுவாபிட்டி தேவாலயத்தில் அதிமேதகு ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றுங்கள். காலத்தின் மணல் இங்கே உண்மையை மறைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர். எனவே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
“ஏனென்றால். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து நாங்கள் அமைதியாக இல்லை. நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் அதிகாரம் கொடுத்தோம். இப்போது அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தவும், தேவையான சட்டங்களை வகுக்கவும், தேவைப்பட்டால் சட்டங்களை மாற்றவும், நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்துங்கள்.
“தற்போதைய நிர்வாகம் இதை ஒரு ரகசியமாக வைத்து ஒவ்வொரு நபருடனும் ஒப்பந்தங்களைச் செய்யாமல், உண்மைக்காக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று, பேராயர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.