இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்புடன், பால் தேநீரின் விலையையும்
தவிர்க்க முடியாமல் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று, அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூறுகிறார்.
அதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை தேநீரின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.