இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர்  தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது

செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று (11) இந்த திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பெலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.

முன்னதாக தென்னக்கோன் தன்னைக் கைது செய்வதற்கான மாத்தறை நீதிவான் உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.

பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல, தென்னகோன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

தேசபந்து தென்னகோன் தொடர்பான ஏதேனும் தகவல்களை வழங்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் பணி சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி